Tuesday, October 2, 2012

இந்த வாழ்க்கை



வீட்டிலிருப்பவர்களுக்கு தெரியாமல்
கல்லூரி டி.சியை
பழைய புத்தகங்களுக்கடியே
ஒளித்து வைத்துவிட்டு
மின்விசிறியில் புடவையை சுற்றுகிறான்
அலைபேசி திரையில்
பாதரசமென மிண்ணும்
கண்ணீர்த் துளியை
பொருட்படுத்தாது
குறுஞ்செய்தியை வார்த்தை வார்த்தையாக
வாசித்து கொண்டிருக்கிறாள்
‘உன்னை நம்பித்தானே
எல்லாமே இருக்கு
அப்புறம் அந்த நம்பிக்கையையே
கெடுத்தா எப்படிப்பா?”
மகனின் முகத்தை பார்க்காமல்
ஒட்டடை படிந்த சுவரை
பார்த்து பேசுகிறார்
இன்று என்னக் கிழமையென்று
யோசித்துக்கொண்டிருந்தவள்
அடுக்களைக்குள் புகுந்துவிட்ட
பூனையை பார்த்ததும்
கையிலிருந்து கரண்டியை
வேகமாய் தூக்கியடிக்கிறாள்
தெருவிளக்கை மொய்க்கும்
ஈசல்களை போல்
நூறு நூறாய்
சேர்ந்தும்
பிரிந்தும்
இந்த வாழ்க்கை

நன்றி:http://solvanam.com/?p=21583

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சொல்லாடல்... சிந்தனை...

Post a Comment