Tuesday, October 2, 2012

திரும்புதல்

பறவையின் அந்திகளைப் போன்றவையல்ல
என்னுடைய அந்திகள்
நான் திரும்பும் காலம் என்பது
கூடடைதலின் நினைவுகளற்றது
வந்தடையவேக் கூடாத
தற்கொலை விளிம்பிலிருந்து
கருப்பு சர்ப்பங்கள் பின்தொடர
நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்
கழுவியகற்ற முடியாத ரத்தம் போல்
என் நீளப்பாதைகளில்
இருள் மண்டிக் கிடக்கிறது
நன்றி:http://solvanam.com/?p=21583

No comments:

Post a Comment