Tuesday, October 2, 2012

திரும்புதல்-2



எதையோ நினைத்து
நடந்து வந்ததில்
கவனமேயில்லாமல்
இங்கு வந்து சேர்ந்து விட்டேன்
கிழிந்து கிடக்கும் புகைப்படமென
பகுதி பகுதியாய்
பிரிந்து கிடக்கிறது
இம்மணல் வெளி
விரிசல்களுக்கிடையே
சாம்பல் நிற மரங்கள்
கிளையசைத்து
காற்றெழுப்புகின்றன
பெருங்காற்று ஊளையிட
நான் செல்ல விரும்பும்
என் கனவின் நகரம்
கருப்பாய் பூமிக்குள் அமிழ்ந்து தொலைகிறது
எதற்காக
இங்கு வரவே கூடாது
என்று நினைத்தேனோ
இப்பொழுது அதற்காகவே
வந்தது போலாகிவிட்டது
ஒரு குழந்தை பலூன் வெடிப்பதை
முதல்முறையாக பார்ப்பதுபோல்
நான் என் வாழ்க்கை
உடைந்து தொங்குவதை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
இனி
வேறுவழியில்லை
வந்த பாதை தெளிவாக ஞாபகமிருக்கிறது
திரும்பி போவதொன்றும்
சிரமமான காரியம் கிடையாது
நன்றி:http://solvanam.com/?p=21583

No comments:

Post a Comment