Wednesday, January 25, 2012

வானின் சிறகுகள்

ஒரு மிகப்பெரிய காத்திருப்பின் கடைசி கணம்
இந்த வானத்தில்தான் முடிந்தது
ஒரு மிகப்பெரிய கருணையின் கடைசித்துளி சாயம்
இந்த வானத்தில்தான் வடிந்தது
ஒரு மிகப்பெரிய நினைவின் கடைசி முத்தம்
இந்த வானத்தில்தான் கரைந்தது
ஒரு மிகப்பெரிய அழிவின் கடைசி கேவல்
இந்த வானத்தில்தான் எதிரொலித்தது
இன்னும் எத்தனையோ மிகப்பெரியவைகளுக்கு
இந்த வானம் சாட்சியாக இருந்திருக்கிறது
இருந்தும் எதற்கும் இந்த வானம் அசைந்ததில்லை
இன்று நீ சொன்னது ஒரு மிகச்சிறிய சொல்
அதற்குள் இருப்பது ஒரு மிகச்சிறிய அர்த்தம்
அது எதிர்பார்ப்பது ஒரு மிகச்சிறிய நியாயம்
ஆனால் அதுதான் இன்று இந்த வானத்திற்கு
சிறகுகளை கொடுத்திருக்கிறது அன்பே

1 comment:

சசிகலா said...

இன்னும் எத்தனையோ மிகப்பெரியவைகளுக்கு
இந்த வானம் சாட்சியாக இருந்திருக்கிறது
அழகான பதிவு அருமை

Post a Comment