Saturday, November 27, 2010

கொஞ்சம் கிறுக்கல்

ஒரு நிராதரவு
ஒரு நிசப்தம்
ஒரு புறக்கணிப்பு
ஒரு கேள்வி
எல்லோரும் கடந்துப் போய்விட்டார்கள்.
*****
அங்கு தனியே பேசிக்கொண்டிருக்கிறது
ஒரு இரவு
அங்கு தனியே வரைந்துக்கொண்டிருக்கிறது
ஒரு சுவர்
அங்கு தனியே அழுதுக்கொண்டிருக்கிறது
ஒரு பிரேதம்
*****
கனவின் பகலில்
இரவு விழித்துக்கொண்டிருக்கிறது
துர்கனவாக...
*****
இதுவரை ஒருபோதும்
நான் அப்படி அழுததில்லை
இனியும் அழபோவதில்லை
இன்றுமட்டும் அழுதுவிட்டுப் போகிறேன்
உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள்
*****
சின்னதாய் ஒரு சிறகு
சின்னதாய் ஒரு வானம்
நடந்து செல்ல மிகப்பெரிய பூமி
*****
நினைக்கச் சொல்லும் உறவுகளை
மறந்துவிடவே நான் விரும்புகிறேன்.
குறைந்தபட்சம்,
மறந்துவிட்டதாக நம்புவதை...
*****
எனக்கென ஒரு போர்
எனக்கென ஒரு நிழல்
எனக்கென ஒரு காதல்
எனக்கென ஒரு காகிதம்
எனக்கென ஒரு பைத்தியக்கார விடுதி
*****
நானும் அதை நம்பினேன்
நீயும் அதையே வலியுறுத்தினாய்
ஆனால் யாரோ பொய்யாக்கிவிட்டார்கள்
அலைகள் கடலை வெறுக்கின்றன
*****
ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவேன்டும்
சேமித்து வைக்க பின்னர்
கிழித்து எறிய...
*****
நீ என்னைப் பற்றி
அவ்வளவு பொய்கள்
 சொல்லியிருக்க வேண்டியதில்லை
எனது உண்மைகள்
அதைவிடவும் கசப்பானவை
*****
                                                                                                              -துரோணா

1 comment:

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி

Post a Comment