Tuesday, November 16, 2010

இரவின் காலம்

நம் நினைவுகள்
பயணித்த காடுகள் யாவற்றிலும்
ஒரு தீராத வெளிச்சம் இருந்தது
ஒரு எரிமலை திரவம் போல்
அது ,மெல்ல அசைந்து
பின் கரைந்து , காற்றினில்
நகரும் மழையின் சாரலில்
தன் வெப்பத்தினை பரப்பிய வேளையில்
நான் உன்னிடம் ஒரு உண்மையை 
சொல்லியிருக்க வேண்டும்
........அது 
முடிவற்ற இரவின் காலம்
                                                                                          -துரோணா

1 comment:

வளத்தூர் தி.ராஜேஷ் said...

மிகவும் அருமை நண்பா

Post a Comment