Friday, December 3, 2010

இளவேனில்

இதுவரை யாரும் வந்திராத பிரதேசத்தின்
இருளில் கனன்றுக்கொண்டிருக்கிறது
ஒரு குரல்
கண்ணாடி பிம்பங்கள்
சிதறியிருந்த அந்த நிலத்தினில்
தன் நிழலினை தேடிக்கொண்டிருக்கிறது
ஒரு தேகம்
ஆளற்ற நாற்காலிகள்
கோப்பைகளை நிரப்பிக்கொண்டும்
காலங்களை பருகிக்கொண்டும் காத்திருக்கின்றன
இளவேனில் வந்துவிட்டது.

No comments:

Post a Comment