Saturday, March 5, 2011

கொஞ்சம் கிறுக்கல் -2

எதைஎதையோ ஆராய்கிறீர்கள்,
ஏதேதோ தீர்ப்பளிக்கிறீர்கள்.

காற்றெனவும் நிலவெனவும் கலங்குகிறது காலம்.
தீர்மாணங்களற்றும்,சுவடுகளற்றும


******

இனியும் உன்னிடம் மறைப்பதற்கில்லை
சொல்லிவிடுகிறேன்.
இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன்.
சொல்லாதுமிருந்திருக்கலாம்.
சொல்லாவிட்டால்தான் என்ன?
நீ அறிவாய் அல்லவா,நான் சொல்ல நினைப்பதை..?

******

உனக்காகவே நான் அதை உருவாக்குகிறேன்
உனக்காகவே நான் அதை உருக்குலைக்கிறேன்
என்னவென்று தெரியவில்லை..?
இன்னமும் கண்களை கசங்கச் செய்கிறது......

******

பிழைகள், திருத்தங்கள்
பின்னிரவின் கிறுக்கல்கள்
ஒழுங்கற்ற கனவுகள் என
இன்மையின் நிழலாக எனது டைரி,
எரித்து விடுகிறேன்
எரிக்க முடிகிறது, எனது டைரியை மட்டும்

******

காய்ந்த முற்செடிகளிலான வெயிற் நிலத்தில்
கருகி திரிகிறது பெயரற்ற ஒரு வெற்றுயிர்
மீண்டும் ஜனனிக்கும் தினத்தில்
தான் கொள்ள வேண்டிய பெயரை தேடிக்கொண்டு....

******


                                                                                 -துரோணா

6 comments:

சக்தி கல்வி மையம் said...

Nice.,

துரோணா said...

Thank U @ karun

சுதர்ஷன் said...

வாழ்த்துக்கள் :-)

துரோணா said...

நன்றி @sudharshan

Raja said...

தரமான கிறுக்கல்கள்...ரசித்தேன் துரோணா...

துரோணா said...

மிகுந்த நன்றிகள் றாஜா

Post a Comment