Monday, May 2, 2011

இரண்டு கவிதைகள்



இன்று,
மெழுகுவர்த்தியின்
கடைசித்துளி தீயின்
மேல் விழுந்த
மழையின் முதற் தூரலில்
நான் உன்னுடைய
முகத்தைக் கண்டேன்.
அது என்னுடைய
முகம் இல்லை
என்று மட்டும் சொல்லிவிடாதே.
ஒருவேளை இதுவரை
நீயேக்கூட பார்த்திராத
உனது முகமாக இருக்கலாம்
*
இறுதியில்,கண்ணீர் சிந்தாமல்
அழக்கூட பழகிக் கொண்டு விட்டேன்.
இனியொரு பிரச்சினையுமில்லை.
புறக்கணிப்பின் கரங்களை
வாஞ்சையுடன் திரும்பவும்
முத்தமிடலாம்.

No comments:

Post a Comment